Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

ஒரு நிமிஷம் செலவழிச்சி இத படிங்க முதல்ல

Tuesday, 12 May 2009


இந்த கவிதைய/கட்டுரையை யார் எழுதுனாங்களோ எனக்கு தெரியாது
ஆனா உண்மையில் இதவிட அவலமான நிலையிலதான்
நாம இருக்கொமுன்னு தோனுதுங்க.

இப்ப என்னால வருத்தம் மட்டும்தான் பட முடியுது.
கண்டிப்பா நம இனத்துக்காக எதாவது பண்ணணுங்க.



திரைகடல் ஓடியும் திரவியம் தேடு...

இது தவறா?

தமிழன் ஓடிய இடமெல்லாம்
அடி வாங்கினான்...
மலேசியா, மும்பை, பெங்களூரு, தென் ஆப்பிரிக்கா, பர்மா...
கேரளாவில் தமிழன் என்றாலே (பாண்டி) தீண்ட்த்தகாதவன்...
அடிவாங்கிய
தமிழன் (முதன் முறையா) திரும்பி அடித்தான்..
பாவம்..
அவனுக்கு பெயர் தீவிரவாதி.
ஆமாம் திரு. சுபாஷ் சந்திர போஸே தீவிரவாதி தானே வரலாற்றில்
தமிழா
மஞ்சள் பையோடு சென்னை வந்தேறியவருக்கு,
இன்று சென்னையே சொந்தம்..

அடுத்த எம்.எல்.ஏ தேர்தலில்,
234 தொகுதியிலும் தன் குடும்பத்தாரை மட்டுமே
நிற்க வைத்தாலும்
வெக்கபட போவதில்லை...

சுமங்கலியை அரசு எடுத்துவிடுமோ,
என கவர்னரிடம் முறையிட்டவர்,
அரசு டீவியை புலம்பவிட்டு,
தயாநிதியிடம் கொஞ்சி குலாவியதென்ன..
கொலை வழக்கிலிருந்து மகனை காப்பாற்ற,
மத்திய அரசிடம் மண்டியிட்ட்தென்ன..

கப்பல் துறையையும்
நெடுஞ்சாலை துறையையும்
இணைத்தால் தான்
ஆட்சியில் பங்கு என்று
சோனியாவிடம்
தமிழர்களை
அடகு வைத்த
என் தமிழின துரோகியே

அன்றே அவள்
முடிவு செய்தாள்
எந்த நாய்க்க்கு
எந்த எலும்பு
என்று.

இந்தியாவின்
மக்கள் தொகையில் 8 விழுக்காடு
தமிழன் இருந்தும்,
12 விழுக்காடு மத்திய வரி
வருமானம் கொடுத்தும்,
தடுக்க முடியவில்லையே
20 மைல் தொலைவில்
கொத்து கொத்தாக
கொல்லபடுவதையும்,
எம் இன பெண்களின்
கற்பு சூறையாடபடுவதையும்,
ஒரு இனமே அல்ல்ல் படுவதையும்,
தடுக்க முடியாத
தமிழ் இனம்.

50 வருடமாக
இலங்க பிரச்சினையை
கிளப்பி கிளப்பி
மீன் பிடித்தவனே..

உண்ணாவிரத நாடகம்
இருந்து நீயே வைத்து கொண்டாய், சொ.செ.சூ....
பேசி வைத்து
உண்ணாவிரதம்.
மழை முடிந்தாலும்
தூவானம் விட நேரமாகும் என்று வசனம் வேறு....

கொல்லபட்ட தமிழ்ர்களை எரிப்பதற்கு
25 கோடி ரூபாய் பண உதவி வேறு..

உன் ஒரு கணவனுக்காக,
இன்னும் எத்தனை
தமிழ் பெண்களின் தாலியை
அறுக்க போகிறாய்.
இன்னும் எத்தனை
தாயினுடைய குழந்தைகளை
கொன்று இரத்தம் குடிக்க போகிறாய்...

பாகிஸ்தானில்
சீக்கியர் தாக்கபட்ட்தற்கு,
இந்தியா கடும் கண்டனம்.

அரபு யூதர் சண்டையில்
இஸ்ரேலுக்கு இந்தியா கடும் கண்டனம்.

ஆஸ்திரேலியாவில்
டாக்டர் கைதுக்கே
மன்மோகனுக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.

பிரான்சின்
விமான நிலையமொன்றில்
சீக்கியனின்
தலமுடியை
சோதனையிட்ட்தற்காக,
அதன் அதிபரிடம் முறையிட்ட
நமது பிரதமர்.
ஈழத்தமிழரின்
உயிருக்காக
குரல் கொடுக்காதது ஏன்?
தெரியாமல் தான் கேட்கிறேன்,
தமிழன் உயிர் என்ன
மயிரை விட கேவலமானதா?

தமிழா இன உணர்வு கொள்...
உணர்வுள்ள தமிழன்
ஒவ்வொருவருக்கும் இது போய் சேர வேண்டும்.

தமிழனை ஏமாற்றி அழிக்க நினைக்கும்
அனைவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

நம் ஒற்றுமையை உலகம் அறியட்டும்..
40ம் தோற்றால் தான் காவேரியும் பாலாறும் பெரியாரும் தமிழகம்
வரும் கவுரவத்துடன்...

யார் வேண்டுமானாலும்
ஜெயிக்கலாம்.

ஆனால் யார் யார் மண்ணை கவ்வ்வேண்டும்
என்பது தான் முக்கியம்.
இதற்கு அப்புறமும்
அவர்கள் டெபாசிட் வாங்கினால்,
நாம் தமிழன் என்று சொந்தங்கொள்வதில்
எந்த பயனுமில்லை.
மே 13ல் கட்டாயம் வாக்களிப்போம்
மே 14ல் தலை நிமிர்ந்து நிற்போம்
தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இதை அனுப்பி வைக்கவும்.
இவண்.
தலை நிமிற ஆசைபடுபவன்


மேலும் வாசிக்க >>

Read more...

அயல் நாட்டு அகதிகள்

Friday, 8 May 2009

நன்பர் வா. அருள் குமார் யார் என்று அறிய முடியவில்லை
ஆனால் உணர முடிந்தது நாங்களும்
மற்றும் ஒரு அருள் குமார் தான்

”இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா”

எவ்வளவு நிஜம் ”இழப்பில் சுகம்” அனுபவித்தால்
மட்டுமே உணரகூடிய சுகம்.






மேலும் வாசிக்க >>

Read more...
Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP